சென்னை ஹைகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருக்கும் 9 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் பழமையான நீதிமன்றங்களுள் சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றாகும். இது கடந்த 1862 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தமிழக மாநிலத்திற்கும் புதுவை யூனியன் பிரதேசத்திற்கு சேர்த்து ஒரே உயர்நீதிமன்றமாக இது செயல்படுகிறது.
இங்கு 74 நீதிபதிகள் மற்றும் ஒரு தலைமை நீதிபதியை நியமிக்கலாம். அதன்படி தற்போது உயர்நீதிமன்றத்தில் 56 நிரந்தர நீதிபதிகளும் கூடுதலாக 19 நீதிபதிகளும் உள்ளனர்.
தற்போது சென்னை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹு உள்ளார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக உள்ள பி.டீ ஆஷா, நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன், புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் 9 நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க அனுமதி அளித்து கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் என்பதை பாடப்புத்தகத்தில் ஏன் நீக்க வேண்டும்? ஹைகோர்ட்
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை கொலிஜியம் குழு பரிந்துரை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த குழு சுப்ரீம் கோர்ட்