புது மாப்பிள்ளையின் கை, காலை கட்டி.. இரும்பு பொருட்களை சாப்பிட சொல்லி சித்ரவதை.. பகீர் சம்பவம்!
மறுவாழ்வு மையம் மீது இளைஞர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்
Recommended Video
செங்கல்பட்டு: புதுமாப்பிள்ளையின் கை கால்களை கட்டிப் போட்டும், இரும்பு பொருட்களை சாப்பிட சொல்லியும் ஹோம் ஒன்றின் மீது அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.
சென்னை ரமாவரத்தை சேர்ந்த சவரிராஜ் மகன் ஸ்டீபன் சக்ரவர்த்தி. இவருக்கும் குரோம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் 4 மாசத்துக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
சமீபத்தில் மனைவி கர்ப்பிணியானார். இந்த விஷயத்தை மாமனார் வீட்டில் சொல்வதற்காக ஸ்டீபன் மனைவியை அழைத்து கொண்டு போனார். பின்னர், வேலை விஷயமாக வெளியில் போவதாக சொல்லிவிட்டு ராமாவரம் சென்றுள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.
தனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்
முரணான பதில்
அதனால் நேரடியாக ஸ்டீபன் வீட்டுக்கு சென்று மாமனார் தரப்பில் விசாரித்துள்ளனர். அப்போது, ஸ்டீபனுக்கு உடம்பு சரியில்லை என்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் வீட்டில் தெரிவித்தனர். ஆனால் எல்லாமே முன்னுக்கு பின் முரணான பதிலாக இருந்ததே தவிர, ஸ்டீபனை கண்ணிலே காட்டவில்லை.
கணிசமான தொகை
இந்நிலையில், மதுபோதையில் அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மறுவாழ்வு மையத்தில் ஸ்டீபன் இருப்பதாக தவகல் கிடைத்ததும் பெண் வீட்டில் அதிர்ந்து போனார்கள். ஸ்டீபனுக்கு குடிப்பழக்கம் இல்லையாம். ஆனாலும், ஸ்டீபனின் தம்பி மைக்கேல், தந்தை சவரிராஜ், சித்தப்பா அந்தோனிதாஸ் 3 பேருமே அந்த ஹோமிற்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து ஸ்டீபனை விட்டு சென்றுள்ளனர். இந்த விஷயம் கேள்விப்பட்டு, மாப்பிள்ளையை மாமனார் தரப்பில் மீட்டுள்ளனர்.
சித்ரவதை
கூடுவாஞ்சேரி மஹாலட்சுமிநகர் சுமனா குட்வில் ஹோமில் இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இதை பற்றி ஸ்டீபன் சொல்லும்போது, "எனக்கு தண்ணி அடிக்கற பழக்கம் இல்லை. ஏன் என்னை இங்க கூட்டி வந்தாங்கன்னு தெரியல. 20 நாளா என்னை இந்த ஹோமில் வைத்து கைகால்களை கட்டிப்போட்டுவிட்டார்கள். அடித்து உதைத்து சாப்பாடு போடாமல் சித்ரவதை செய்தாங்க.
இரும்பு கம்பி
ஆணி, மெல்லிய இரும்பு கம்பிகளை கொடுத்து முழுங்க சொன்னார்கள். இல்லைன்னா கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினாங்க. அப்படியும் என் வாயில் ஆணி, கம்பியை போட்டு தண்ணி ஊற்றி விழுங்க செய்தாங்க. என்னை மாதிரி 50-க்கும் மேற்பட்டோர் இந்த ஹோமில் சித்ரவதையில இருக்காங்க" என்று அதிர வைத்து கொண்டே போனார். இதையடுத்து, ஸ்டீபனுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது, வயிற்றில் ஆணி, கம்பிகள் இருப்பது உறுதியானது.
புகார்
இந்த ஆதாரங்களுடன் கூடுவாஞ்சேரி ஸ்டேஷனில் ஸ்டீபன் குடும்பத்தார் மீதும், சம்பந்தப்பட்ட ஹோம் மீதும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஹோம் ஓனர் அப்துல் சலாம், மேனேஜர் சுப்பிரமணி 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த ஹோம் மஹாலட்சுமி நகரில் இருட்டான பகுதியில் அமைந்துள்ளது. பக்கத்தில் நிறைய வீடுகள் இருக்கின்றன. அடிக்கடி இந்த ஹோமில் இருந்து ராத்திரி நேரங்களில் அலறல் சத்தம் கேட்பதாக மக்கள் சொல்கிறார்கள்.