பல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை
சென்னை: மக்களவை தேர்தல் அமைதியாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் திடீரென பழுதாகின்றன. இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு செய்ய முடியும். இந்நிலையில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் தாமோதரன், பல வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடு செய்யும் வகையில் வாக்குப் பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் வாக்களிக்க வரும் மூத்த குடிமக்களுக்கு உரிய வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும் புகார் மனுவில் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
பெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்