கையை முறுக்குவது, மிரட்டுவதை எல்லாம் முன்பே பார்த்துவிட்டோம்.. சர்காருக்கு குரல் கொடுத்த குஷ்பு!
சர்கார் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: சர்கார் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கிறார்.
அதிமுகவினரின் போராட்டம் காரணமாக இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது. தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது.
இந்த படத்தில் நிறைய அரசியல் தொடர்பான காட்சிகள் உள்ளது. இதனால் இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
[அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக நடவடிக்கை.. 54 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு!]
அதிமுகவினரின் எதிர்ப்பு காரணமாக படம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இதை தொடர்ந்து சர்கார் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Politics and power is being clearly misused by those who are forced upon the people of TN..arm twisting,threatening,creating fear psychosis is not new..we saw it earlier with @actorvijay films n now..what is making these law makers so unsecured?? #BuildingStrongBasementWeakAIADMK
— khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) November 8, 2018
குஷ்பு தனது டிவிட்டில், தமிழ்நாட்டு மக்கள் மீது அரசு தனது அதிகாரத்தை தவறுதலாக திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்க பார்ப்பது எல்லாம் புதிதல்ல, இதையெல்லாம் ஏற்கனவே பல விஜய் படங்களில் பார்த்துவிட்டோம். அரசியல்வாதிகள் ஏன் இந்த விவகாரத்தை இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டார்கள். பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக, என்றுள்ளார்.