பச்சை டிராக்டரில்.. டிரைவர் சீட்டில் உட்கார்ந்தபடி.. வயநாட்டை தெறிக்க விட்ட ராகுல் காந்தி
சென்னை:விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் டிராக்டர் ஓட்டி அசத்தினார் அந்த தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி.
பச்சை நிற டிராக்டரில் மலர்கள் தூவப்பட்டிருந்தன. மலர் மாலைகள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டும் இருந்தது. அதை திரிக்கைபட்டா முதல் முட்டில் என்ற பகுதி வரை இயக்கினார் ராகுல் காந்தி.
சுற்றிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ஓடி வந்தபடி இருந்தனர். இதேபோல காங்கிரஸ் தொண்டர்களும் ராகுல் காந்தி இயக்கிய டிராக்டர்கள் பின்னால் தங்களது டிராக்டர்களை ஓட்டியபடி வந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
#WATCH Kerala: Congress leader Rahul Gandhi takes out a tractor rally from Thrikkaipatta to Muttil in Wayanad district. pic.twitter.com/ZJ3vkYEIi7
— ANI (@ANI) February 22, 2021
முன்னதாக, கல்பெட்டாவிலுள்ள ஒரு கிறிஸ்தவ கான்வென்ட் சென்று அங்குள்ள கன்னியாஸ்திரிகளுடன் உரையாடினார். அவர்கள் வழங்கிய கேரள பாரம்பரிய சிற்றுண்டியை உண்டு மகிழ்ந்தார்.