சபாநாயகர் தனபாலுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு!
சென்னை: தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று சந்தித்து பேசினர்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்எல்ஏக்கள், வசந்த குமார், விஜயதாரணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சபாநாயகரை அவரது அறையில் இன்று சந்தித்து பேசினார்கள்.
சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர்.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்துவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.