தமிழகத்தை தாக்கிய சுனாமிக்கு காரணம் காங்கிரஸ் கட்சியாம்.. புனேயிலிருந்து வந்த மர்ம போன் அழைப்பு
சென்னை: 2004ம் ஆண்டு தமிழகத்தை சூறையாடிய சுனாமிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பிரபல நாளிதழ் அலுவலகத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புனேயிலிருந்து சென்னையிலுள்ள பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிருபர் பிரிவுக்கு இந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னணியில், காங்கிரஸ் கட்சி சதி இருப்பதாக கூறியுள்ளார். தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினாராம். இதையடுத்து, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதே நாளிதழுக்கு முன்பு ஒருமுறையும் வித்தியாசமான போன் அழைப்பு வந்ததாம். அதில் பேசிய நபர், ஒரு குரூப் மக்கள், இந்த உலகிலுள்ள மொத்த மக்களின் மனதையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர்கள் மொத்த உலக மக்கள் மனதையும் கட்டுப்படுத்தி தங்கள்வசப்படுத்திவிடுவார்கள். இதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறினாராம்.