தர்பார் படத்தில் சசிகலாவை குறிக்கும் வசனத்தை நீக்க தயார்: லைக்கா நிறுவனம்
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தில் சசிகலாவை குறிக்கும் வசனத்தை நீக்க தயார் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்துள்ளது.
தர்பார் திரைப்படத்தில் இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இது பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை குறிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அத்துடன் இந்த வசனத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவ்வசனத்தை நீக்க லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக லைக்கா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக எழுதப்பட்ட வசனம் தான் அது அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்ததால் நீக்கப்படுகிறது. அது தனிப்பட்ட எந்தவொரு நபரையும் குறிப்பதல்ல என கூறியுள்ளது.
உடைகிறதா கூட்டணி.. திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது..கே.எஸ்.அழகிரி அதிரடி அறிக்கை