சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பொதுச்செயலாளர்" எடப்பாடியாரே வருக.. அதிமுகவில் வெடித்து கிளம்பியது அடுத்த போஸ்டர் சர்ச்சை!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ்- ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ

    சென்னை: அதிமுகவில் அடுத்த சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது... அதுவும் போஸ்டர் ரூபத்திலேயே சர்ச்சைகள் தமிழக மக்களை திணறடிக்கின்றன.

    ஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா சொன்னாலும் சொன்னார், யார் அந்த ஒற்றை தலைமை என்பதுதான் விவகாரமே!

    ராஜன் செல்லப்பா யார் அந்த "தலை"என்பதை வெளிப்படையாக சொல்லாமல் போனதால், இடியாப்ப சிக்கல் அதிமுகவில் நீடித்து வருகிறது.

    இன்று அதிமுக மா.செ கூட்டம்... அமித்ஷாவை நேற்றே சந்தித்த 2 அமைச்சர்கள்.. பரபர தகவல்கள் இன்று அதிமுக மா.செ கூட்டம்... அமித்ஷாவை நேற்றே சந்தித்த 2 அமைச்சர்கள்.. பரபர தகவல்கள்

    ராஜன் செல்லப்பா

    ராஜன் செல்லப்பா

    ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சிலர் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் நிலையில், இது துணை முதல்வருக்கு எதிரான கருத்து என்பது பொதுவாக பார்க்கப்படுகிறது.

    பேனர்

    பேனர்

    ராஜன் செல்லப்பா பேசியது குறித்து நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல கூடாது என்பதையும் மீறி திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் அச்சிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது.

    எம்எல்ஏக்கள்

    எம்எல்ஏக்கள்

    இதனிடையே, எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை என்ற பொறுப்பை தக்க வைக்க காய் நகர்த்துகிறார் என்றும், கட்சி தலைவர் பதவி, முதல்வர் பதவி என இரண்டையுமே தானே வகிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் கசிய ஆரம்பித்தன. இது சம்பந்தமாக எம்எல்ஏக்கள் தரப்பினை அவர் சந்தித்து பேசினார் என்றும், 2 தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கே சென்று ஆதரவு கேட்டதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

    தீர்மானம்

    தீர்மானம்

    அதேசமயம், பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமியே வகிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட ஒற்றை தலைமை யார் என்பதை தீர்மானிக்கும் கூட்டமாகவே இது கருதப்பட்டது.

    பொதுச்செயலாளர்

    பொதுச்செயலாளர்

    அந்த வகையில், அதிமுக தலைமை கழகம் அருகே ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் "பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் கூட்டம் கூடுவதற்கு முன்பே.. எம்எல்ஏக்களும் முழுசா தலைமை கழகத்துக்கு வந்து சேராதநிலையில்.. எந்த ஒரு விஷயமும் கூட்டத்தில் பேசவே ஆரம்பிக்காத நிலையில், அதற்குள் எடப்பாடியார் "பொதுச்செயலாளரா?" என்று அப்பகுதி மக்கள் வியப்புடன் அந்த போஸ்டரை பார்த்தவாறே சென்றனர்!

    English summary
    Controversy poster "General Secretary Edapadi Palanisamy" in AIADMK Head Office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X