2வது முறையாக நடந்த சோதனையிலும் நெகட்டிவ்.. சிவி சண்முகத்திற்கு கொரோனா இல்லை
சென்னை: தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு 2வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என்கிறது தமிழக அரசு. இந்த நிலையில் தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
கொரோனாவால் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் உயிரிழந்தார்: கனிமொழி
ஆனால் இதனை மறுக்கும் வகையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை முடிவை வெளியிட்டுள்ளது. அதில் இருவருக்குமே கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையிலும் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெளிவாகி உள்ளது.