கொரோனா பாதிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி (10.04.20) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு;
சென்னை - மொத்தம் 172 பேர் ... இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை - மொத்தம் 86 பேர் .. இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திண்டுக்கல் - 54 பேர்.. இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நெல்லை - 56 பேர்
ஈரோடு -60 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருச்சி -36 பேர்
நாமக்கல் -41 பேர்
ராணிப்பேட்டை -மொத்தம் 36 பேர்.. இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு - 40 பேர் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை - மொத்தம் 25 பேர்
கரூர் -23 பேர்
தேனி -40 பேர்
தூத்துக்குடி -மொத்தம் 24 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு பாசிட்டிவ்
விழுப்புரம் -23 பேர் இன்று புதிதாக 3 பேருக்கு பாசிட்டிவ்
திருப்பூர் -மொத்தம் 26 பேர்
கடலூர் -14 பேர் .. இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்
சேலம் -14 பேர்
திருவள்ளூர் -13 பேர்
திருவாரூர் -13 பேர்
விருதுநகர் -11 பேர்
தஞ்சாவூர் -11 பேர்
நாகை -12 பேர்
திருப்பத்தூர்- 16 பேர்
திருவண்ணாமலை - மொத்தம் 10 பேர் .. இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி
கன்னியாகுமரி -15 பேர்.. இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி
காஞ்சிபுரம் -6 பேர்
சிவகங்கை -6 பேர்
வேலூர் -11 பேர்
நீலகிரி -7 பேர்.. இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி
தென்காசி -3 பேர்
கள்ளக்குறிச்சி -3 பேர்
ராமநாதபுரம் -2 பேர்
அரியலூர் -1
பெரம்பலூர் -1
மேற்கண்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 பேர் நலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.