தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,819 பேருக்கு தொற்று.. 2,520 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு..!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவை காட்டிலும் தமிழகத்தில் தற்வோது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 2,520 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 7,30,272 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,478 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் கொரோனா மட்டுமின்றி வேறு சில இணை வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் பாஜகவில் இணைகிறேனா...? பிஸ்கோத் காமெடியை விட பெரிய காமெடியாக இருக்கே... கலாய்த்த சந்தானம்..!
மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் பெரம்பலூர், சிவகங்கை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.