பூட்டிய வீட்டில் அழுகிய பிணங்கள்.. வீசிய துர்நாற்றம்.. வயதான தம்பதி சடலங்களாக மீட்பு.. சென்னையில்!
பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதி சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது
சென்னை: பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதியினரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது.
சென்னை சூளைமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தம்பதி ஜீவன் - தீபா... ஜீவனுக்கு 80 வயதாகிறது.. தீபாவுக்கு 70 வயதாகிறது.. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு கொரோனா இருப்பதாக குடியிருப்பு வாசிகள் சுகாதாரத்துறைக்கு கடந்த வாரம் தகவல் சொல்லவும், அதன்படியே அவர்களும் தம்பதி வீட்டுக்கு விரைந்து வந்தனர்.. ஆனால், டெஸ்ட் எடுக்க ஆஸ்பத்திரிக்கு வர முடியாது என்று சொல்லி, சரியான ஒத்துழைப்பையும் அவர்கள் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து, தற்போது, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்கவும் போலீசார் விரைந்து வந்தனர்.. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அதை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள்.. அங்கே தம்பதியின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தது.. அதை கைப்பற்றிய போலீசார் அவர்களுக்கு கொரோனா தொற்று சோதனைக்காக கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தமின்றி உருவான 4 ஹாட்ஸ்பாட்.. கேரளாவில் வேகமாக அதிகரிக்கும் கேஸ்கள்.. அதிர வைக்கும் பின்னணி!
இவர்கள் கொரோனா வந்து இறந்தார்களா? அல்லது இருவரின் மரணத்துக்கு வேறு என்ன காரணம் என்ற விசாரணை நடந்து வருகிறது. வயதான தம்பதிகள் இறந்து அழுகிய நிலையில், வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டது சூளைமேட்டில் அதிர்ச்சியை தந்து வருகிறது.