டெஸ்டிங்கை உயர்த்தினாலும்.. கட்டுக்குள் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் இன்று 1685 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 1685 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 766677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.டெஸ்டிங் அதிகரிக்கப்பட்டாலும் பெரிய அளவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கவில்லை. இந்தியாவில் தமிழகத்தில் தினமும் அதிக அளவில் கொரோனா டெஸ்ட் நடக்கிறது.
ஆனாலும் டெல்லி, கேரளா போல அதிக அளவில் கேஸ்கள் பதிவாவது இல்லை. தமிழகத்தில் தினமும் 2000க்கும் குறைவாகவே கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.
47 நாட்களுக்கு பிறகு முதல் முறை.. குணமடைந்தோரை விட அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது?
தமிழகம்
தமிழகத்தில் இன்று 1685 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 766677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 13404 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 741705 பேர் இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று டிஸ்சார்ஜ்
2173 பேர் தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 11568 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
சென்னை
சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 210560 பேருக்கு சென்னையில் இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 147பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 47024 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46434 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் எண்ணிக்கை
நேற்றை விட இன்று அதிக கொரோனா சோதனை செய்யப்பட்டாலும் கேஸ்கள் குறைவாக வந்துள்ளது. 11401239 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 68033 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 67309 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 11116440 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.