சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85859 ஆக உயர்ந்துள்ளது .

கொரோனா தாக்கிய விருதாச்சலம் தாசில்தார் கவியரசு மரணம் - பேஸ்புக் பதிவை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலிகொரோனா தாக்கிய விருதாச்சலம் தாசில்தார் கவியரசு மரணம் - பேஸ்புக் பதிவை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று 78 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 2481 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 27 பேர் பலியாகி உள்ளனர். மதுரையில் 8 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் செங்கல்பட்டில் 8 பேர் பலியாகி உள்ளனர் .

டிஸ்சார்ஜ் எத்தனை

டிஸ்சார்ஜ் எத்தனை

இன்று மட்டும் தமிழகத்தில் 4059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 50294 ஆகி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 117915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 112 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது.

இன்று சோதனை

இன்று சோதனை

இன்று 52993 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1932492 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 51640 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1855817 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

Recommended Video

    காலையிலேயே சென்னையில் கொட்டி தீர்க்கும் மழை
    வேறு எங்கு

    வேறு எங்கு

    சென்னைக்கு அடுத்து இன்று திருவள்ளூர் 410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9110 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மதுரையில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 8251 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9658 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: 4979 more Cases in Tamilnadu today, Total number cases reach 170693 so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X