தொடர்ந்து அதிகரிக்கிறது.. தமிழகத்தில் ஒரே நாளில் 5860 கொரோனா கேஸ்கள்.. மொத்தமாக 332105 பேர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 332105 பேர் ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக சராசரியாக தமிழகத்தில் 5800 கேஸ்கள் வருகிறது. பலி எண்ணிக்கையும் 100 க்கும் அதிகமாக தினமும் வருகிறது.
சென்னையில் இன்று 1179 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 115444 ஆக உயர்ந்துள்ளது
குழப்பத்துக்கு காரணமே அதுதான்.. ஆனால் அஇஅதிமுக அறிக்கையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கலையே!
பலி எண்ணிக்கை
இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 127 பேர் பலியாகி உள்ளனர். 119 தான் இதுவரை ஒரே நாளில் அதிகபட்சம் பலி எண்ணிக்கையாக இருந்தது. மொத்தமாக கொரோனா காரணமாக 5641 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். சென்னையில் மட்டும் 26 பேர் பலியாகி உள்ளனர்.
டிஸ்சார்ஜ் எத்தனை
தமிழகத்தில் மொத்தமாக 272251 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 5236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 54213 ஆக உள்ளது. டிஸ்சார்ஜ் எண்ணிக்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
சென்னைக்கு அடுத்து
சென்னைக்கு அடுத்து இன்று செங்கல்பட்டில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 20465 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 422 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 19382 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று ராணிப்பேட்டையில் 260 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 8217 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சோதனை எத்தனை
இன்று 71343 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 3640796 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 69598 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 3513495 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.