பெரும் அதிர்ச்சி.. சென்னை, மதுரையில் மோசமான நிலைமை.. ஒரே நாளில் தமிழகத்தில் 88 பேர் கொரோனாவிற்கு பலி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இன்று 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் மொத்த பாதிப்பு 84598 ஆக உயர்ந்துள்ளது.
மிக மோசமான நிலை.. ஒரே நாளில் 4807 கொரோனா கேஸ்கள்.. தமிழகத்தில் 165714 பேர் இதுவரை பாதிப்பு!
ஆனால் என்ன
ஆனால் இன்னொரு பக்கம் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு இன்று 88 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 2403 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மட்டும் 31 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மொத்த பலி எண்ணிக்கை 1407 ஆக உள்ளது .
மதுரை இன்று
மதுரையில் 9 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூரில் இன்று 7 பேர் பலியாகி உள்ளனர். காஞ்சிபுரத்தில் இன்று ஐந்து பேர் பலியாகி உள்ளனர். தேனியில் இன்று 4 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் ராமநாதபுரத்தில் இன்று 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வேலூரிலும் இன்று 4 பேர் பலியாகி உள்ளனர்.
மொத்தம் எத்தனை
மொத்தமாக மதுரையில் 147 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூரில் மொத்தமாக 154 பேர் பலியாகி உள்ளனர். காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஐந்து பேர் பலியாகி உள்ளனர். தேனியில் மொத்தமாக 30 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் ராமநாதபுரத்தில் மொத்தமாக 47 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வேலூரிலும் மொத்தமாக 25 பேர் பலியாகி உள்ளனர்.
மரணம் அதிகரிக்கிறது
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 60+ மரணங்கள் வர தொடங்கி உள்ளது. நினைத்ததை விட தமிழகம் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் கேஸ்கள் அதிகமாக வரும் நிலையில் இன்னொரு பக்கம் பலி எண்ணிக்கையும் அதிகம் வருகிறது. இதில் பலர் 40 வயதுக்கும் குறைவு என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக மாறியுள்ளது.