தூய்மை பணியாளர்கள் முக்கியம்.. கோடம்பாக்கத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவிய அதிமுக செயலாளர்
சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராம் பல்வேறு உதவி பணிகளை செய்தார்.
சென்னை: சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராம் பல்வேறு உதவி பணிகளை செய்தார்.
Recommended Video
கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொடர் லாக் டவுன் காரணமாக மக்கள் பலர் கடுமையாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். அடிப்படை வசதி இல்லமால் லாக் டவுன் காரணமாக கஷ்டப்படும் மக்களுக்கு தமிழகம் முழுக்க உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் அதிமுகவினர் சார்பாக இன்று உதவி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதிமுகவின் அமைப்பு செயலாளரும், தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ஆதி ராஜாராம் இந்த உதவி பணிகளை செய்தார்.
சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் தூய்மை பணிகளை செய்யும் 200க்கும் அதிகமான தூய்மை பணியாளர்களுக்கு இவர் உதவிகளை செய்தார். இவர்களுக்கு இலவசமாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். அதேபோல் காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி உதவினார்கள்.
தன்னலமற்ற துணிச்சலான அவர்களின் பணிகளை பாராட்டும் வகையில் இந்த உதவிகளை செய்தனர். அதிமுக நிர்வாகி லோகேஷ் இந்த பணிகளை முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.