கொரோனாவையும் விட்டு வைக்காத 'பலான' வெப்சைட்டுகள்.. வினோத யோசனை.. இப்படியும் நடக்குமா?
சென்னை: உலகெங்கிலும் 90,000க்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களிடையே பீதி அதிகரித்து வருகிறது. ஆனால் இது ஆபாச வலைத்தளங்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
'தி சன்' என்ற பிரபல ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள தகவல்படி, கொரோனா வைரஸை தொடர்புப்படுத்தி ஆபாச வீடியோக்கள் பிரபலமாக உள்ளன. டஜன் கணக்கான வீடியோக்கள் இதே மாதிரி இருக்கிறதாம்.
"டிஎஸ்ஏ ஏஜென்ட் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணை கைது செய்கிறார்" மற்றும் "வெறிச்சோடிய வுஹான்" போன்ற தலைப்புகளில் இதுபோன்ற வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டு உள்ளன என்று கூறப்படுகிறது.
மக்கள் ஈர்ப்பு
இதுபற்றி ஆபாசப்பட ஸ்டார் ஒருவர் அளித்த பேட்டியில் "மக்கள் COVID-19 தொடர்பான ஆபாசத்திற்கு ஈர்க்கப்படுகிறார்கள், அதேபோல் மக்கள் திகில் உணர்வுள்ள திரைப்படங்களுடன் இணைப்பு கொண்டுள்ளனர். இதுதான் இதுபோன்ற வீடியோக்களுக்கு காரணம் என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் நம்மை காப்பாற்றிக்கொள்ளும் விஷயம்களைத் தேடுகிறோம்.
அச்சம்
கோவிட் -19 என்பது இப்போது உலகில் உள்ள அனைவருக்கும் அச்சத்தையும் மர்மத்தையும் தருகிறது. எனவே இயல்பாக மக்களுக்கு அதன் மீது ஆர்வம் உள்ளது. அதை இந்த வெப்சைட்டுகள் பயன்படுத்திக்கொள்கின்றன. அந்த மாதிரி வீடியோக்களில் நடிக்க கூறுகிறார்கள். எனவே நடிக்க வேண்டியுள்ளது. திரில் படங்களை போலத்தான் இதுவும்" என்கிறார்.
மாஸ்க் அணிந்தவர்கள்
ஆபாச இணையதளத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக, சுமார் 112 வீடியோக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த வீடியோக்களில், மாஸ்க் அணிந்தபடி, ஆண்களும், பெண்களும் உடலுறவு கொள்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு செய்யவில்லை. ஆனால், அவ்வாறு நடித்தபடி வீடியோ வெளியிடுகிறார்கள்.
ஹாரர் படங்கள்
மக்களின் அச்சத்தை கொண்டே ஹாரர் திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன. இதே பாணியைத்தான், ஆபாச தளங்களும் கையில் எடுத்துள்ளன. ஆனால் அச்சத்தையும் மறந்து, காமுகர்கள் இதையும் ரசிக்கிறார்கள் என்பதே இதுபோன்ற செய்திகள் வெளியாக காரணம். இதுபோன்ற வீடியோக்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைத்து வருவதுதான் கொடுமை.