கோவையில் எதிர்பாராத உச்சம்.. தமிழகத்தில் இன்று 5560 பேருக்கு கொரோனா.. மொத்தம் 525420 பேர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 5560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,25,420-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. ஒரே அடியாக கேஸ்கள் உயரவில்லை என்றாலும், தினமும் சராசரியாக ஒரே அளவில் கொரோனா கேஸ்கள் வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக கொரோனா சோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரம் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் 5500-5900 வரை மட்டுமே பதிவாகி வருகிறது.
கொரோனா சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
எத்தனை கேஸ்கள்
தமிழகத்தில் மேலும் 5560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,25,420-ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் 992 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 9874 பேர் ஆக்டிவ் கேஸ்களாக உள்ளனர்.சென்னையில் 152567 பேருக்கு மொத்தமாக கொரோனா ஏற்பட்டுள்ளது.
கோவை நிலை
கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.இன்று கோவையில் 530 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 24234 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 283 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 31712 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 15633 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 46610 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 470192 பேர் இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 59 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். மொத்தமாக 8618 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர் .
டெஸ்ட் எண்ணிக்கை
6217923 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 84523 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 82683 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 6023627 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.