தமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. பாதித்தவர்களைவிட மீண்டவர்கள் அதிகம்.. இன்றைய கொரோனா நிலவரம்
சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2516 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே மாதம் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துவிட்டது. உயிரிழப்பும் பெரிய அளவில் இல்லை.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை
25,44,870 ஆக உயர்ந்துள்ளது.
எவ்வளவு
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2516 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24,86,192 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,862 ஆக உயர்ந்துள்ளது.
சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக 25 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது . தமிழகத்தில் நேற்று 25526 ஆக இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 24 816 ஆக குறைந்தது.
எவ்வளவு
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 177 பேரும். ஈரோட்டில் 135 பேரும், சென்னையில் 130 பேரும், சேலத்தில் 110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2293 பேர் உள்ளனர். சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், திருச்சியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.