சென்னையில் அதிகம்.. அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு உள்ளது?
தமிழகத்தில் கொரோனா காரணமாக எந்தெந்த மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா காரணமாக எந்தெந்த மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட கொரோனா தீவிரமாக, வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுக்க 1657 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 50 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக 124 பேருக்கு கொரோனா உள்ளது. இதில் 117 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 6 பேர் குணமடைந்து விட்டனர். மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகிவிட்டார்.
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது!
சென்னையில் எத்தனை பேருக்கு
தமிழகத்தில் அதிகமாக சென்னையில்தான் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் திருநெல்வேலியில் 23 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சேலத்தின் நிலை
சேலத்தில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. மதுரையில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு ஒருவர் பலியாகிவிட்டார். கன்னியாகுமரியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் ஐந்து பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. விழுப்புரத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. வேலூரில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்கள் எப்படி
விருதுநகரில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. திருவண்ணாமலையில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. திருப்பூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. திருச்சியில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. தூத்துக்குடியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மற்றும் டெல்டா நிலை
தஞ்சாவூரில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. கரூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. செங்கல்பட்டில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. நேற்று கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் திருநெல்வேலிதான்.நேற்று ஒரே நாளில் அங்கு மட்டும் அதிகமாக 22 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது.