6 மாசத்துக்கு அதைப் பத்தி நினைக்கவே நினைக்காதீங்க.. பெரியசாமி தரும் அட்வைஸ்!
சென்னை: கொரோனோவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்க என்று கூறி விட்டனர். எனவே அதற்கேற் மனதளவில் நாம் தயாராக வேண்டியதுதான்.
இந்த நிலையில் கொரோனாவால் ஏற்பட்டஉள்ள பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளிக்கலாம் என்பது தொடர்பாக நமது வாசகர் பெரியசாமி தந்துள்ள சில யோசனைகளைப் பார்க்கலாம்.
1 . வருமானத்திற்கு முதல் தேவை வேலை. அனைத்து நிறுவனங்களும் வரும் வாரங்களில் வேலை நீக்கத்தை அறிவிக்க தொடங்கும். முதலில் இருக்கும் வேலையை ஏற்பாடு பாட்டாவது காப்பற்றி கொள்ள வேண்டும். வேறு கம்பெனிக்கு மாறும் எண்ணத்தை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.
2 . கையிருப்பு எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். அதில் குழந்தைகளின் 3 மாத படிப்புக்கான செலவை உடனே பள்ளியில் கட்டி விட வேண்டும். நமது கஷ்டம் குழந்தைகளுக்கு செல்ல கூடாது.
3 . எதையும் அடமானம் வைத்து கடன் வாங்க கூடாது. அவசியப்பட்டால், தங்க நகைகளை விற்று விட்டு தற்போதைய நிலையை சமாளிக்கலாம்.
4 . தற்போதைய நிலையில் வீட்டையோ, நிலத்தையோ விற்க கூடாது. விற்றால் அடி மாட்டு விலைக்கு தான் போகும்.
5 . குழந்தைகளுக்கு விருப்பமான உணவை you tube பார்த்து வீட்டிலேயே செய்யலாம்.
பொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க
உங்களது ஆலோசனைகளையும் இதுபோல எங்களுக்குச் சொல்லலாம். ஒருவருக்கொருவர் யோசனைகளைப் பரிமாறிக் கொள்வோம். அனைவருமே ஒரு குடும்பமாக ஒருவருக்கொருவர் கை கொடுப்போம்.. உதவி செய்வோம்.. இந்த நெருக்கடி சூழலிலிருந்து விடபடுவோம்.