சமாளிக்க முடிந்தால் மட்டும் போதாது.. மத்தவங்களுக்கும் உதவி செய்யுங்க.. வாசகரின் அதிரடி!
சென்னை: எதிர்பார்க்காத பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது நம்மால் சமாளிக்க முடிந்தால் மட்டும் போதாது. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யவும் வேண்டும் என்று தான் செய்துள்ள உதவிகளை எடுத்து வைத்துள்ளார் ரிட்டையர்ட் டான் என்ற பெயரில் கருத்திட்டுள்ள நமது வாசகர்.
இதோ அவர் செய்த சில உதவிகள்.
பிரதமரின் கொரோனா நிவாரண நிதி ஆன்லைன் மூலம் வழங்கல்
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி வழங்கல்
சோமாடோ டெலிவரி ஊழியர்கள் கொரோனா நிவாரண நிதி
உபேர் கேர் டிரைவர் கொரோனா நிவாரண நிதி
ஓலா டிரைவர் கொரோனா நிவாரண நிதி
அமேசான் மூலம் சாப்பாடு நன்கொடைகள்
பல்வேறு ஆன்லைன் அமைப்புகள் மூலம் சிறு சிறு நன்கொடைகள்
வேலைக்காரருக்கு இரண்டு மாதத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
பல்வேறு உறவினர்களுக்கு இரண்டு மாதத்துக்கு வேண்டிய மருந்து மாத்திரைகள் வாங்க நிதியுதவி
பல்வேறு உறவினர்களுக்கு இரண்டு மாதத்துக்கு வேண்டிய மளிகை சாமான்கள் வாங்க நிதியுதவி
ஒரு உறவினருக்கு மகளின் பிரசவத்துக்கு அவசரமாக செல்ல 5000 நிதியுதவி
வேற்று மதத்தை சேர்ந்த பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு அவசர நிதியுதவி 5000.
மற்றொரு நெருங்கிய உறவினருக்கு அவசர உதவியாக 12000.
வயதான சில குடும்பத்தார்க்கு ஆளுக்கு 500 நிதியுதவி.
பல்வேறு நம்மவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர்கள் இலவசமாக வழங்கினேன்.
வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுக்கடன், தொழில் கடன் போன்றவை ஒழுங்காக செலுத்தப்பட்டன.
வீட்டு கரண்டு பில் செலுத்தப்பட்டது.
பலவேறு இன்சூரன்ஸ் தொகைகள் ஒழுங்காக செலுத்தப்பட்டது.
பொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க
இதை விளம்பரத்துக்காகவோ, பெருமைக்காகவோ சொல்லவில்லை. பொய் எதுவுமில்லை. வசதி படைத்த பலர் இந்த கஷ்ட காலத்தில் உதவாமல் சுயநலமாக இருந்ததை பார்த்தேன். அதனால் இதை சொல்கிறேன். என் தந்தை ஒரு டீக்கடை வைத்து வாழ்க்கையை தொடங்கியவர். நான் படித்து உழைப்பால் முன்னேறியதால்தான் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் எண்ணம் வருகிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் இதுவரை இடஒதுக்கீடு, அரசு உதவிகள் போன்றவற்றை எதிர்பார்த்து வாழ்ந்ததில்லை என்று கூறியுள்ளார் இந்த வாசகர்.
சூப்பர் சார்!