தமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா தொற்று.. மொத்த பாதிப்பு 7,24,522 ஆக உயர்வு..!
தமிழகத்தில் இன்று 2,511பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,24,522 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 2652 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பானது 3000க்கும் கீழாக சரிந்து கொண்டே வருவது சற்று ஆறுதலாக இருக்கிறது.
அந்த வகையில், இன்று 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,24,522-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 680 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,91,236 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இன்று ஒரே நாளில் மட்டும் 3,848 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.
தமிழகத்தில் கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கான தடை தொடரும்
அதேபோல, தமிழகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆகும்.. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,122-ஆக அதிகரித்துள்ளது. 22,164 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 6,91,236 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 202 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 70,767 பரிசோதனைகள் செய்யப்பட்டன.. இதுவரை மொத்தம் 99,56,210 கொரோனா டெஸ்ட்கள் செய்யப்பட்டுள்ளன.