சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்றைவிட இன்று பாதிப்பு குறைவு.. தமிழகத்தில் 2,522 பேருக்கு தொற்று.. இதுவரை 6.75 லட்சம் பேர் குணம்!

தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,14,235-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பானது 3000க்கும் கீழாக சரிந்துள்ளது.

 Coronavirus positive case 2,522 today in Tamilnadu

இன்று தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,14,235 ஆக அதிகரித்துள்ளது.. அதேபோல, கொரோனாவில் இருந்து இதுவரை 6,75,518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,029 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்தோர் 27 பேர் ஆவர்.. இதன்மூலம் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,983 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,60,430 ஆகும்.

கொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு கொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு

இன்று மட்டும் 70,687 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 201 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 27,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,31,112 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,518 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,83,091 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,004 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Coronavirus positive case 2,522 today in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X