அதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 2,652பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,19,403-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பானது 3000க்கும் கீழாக சரிந்து கொண்டே வருவது சற்று ஆறுதலாக இருக்கிறது.

அந்த வகையில், இன்று தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,19,403-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,83,464 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இன்று மட்டும் 4,087 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல, தமிழகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆகும்.. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 11,053 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 756 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 198487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகமெங்கும் இதுவரை 98,08,087 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. இன்று 75,224 டெஸ்ட்டுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 202 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 24,886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,34,215 பேர் ஆண்கள், 2,85,156 பேர் பெண்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications