இன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்!
தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் மேலும் 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3859 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பானது 3000க்கும் கீழாக சரிந்து கொண்டே வருவது சற்று ஆறுதலாக இருக்கிறது.
அந்த வகையில், இன்று தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,16,751-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
அதேபோல, தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,79,377 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,859 பேர் குணமடைந்துள்ளனர்... ஆனால், கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்... இதையடுத்து, மொத்தம் பலி எண்ணிக்கை 11,018 ஆக உயர்ந்துள்ளது.
சமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்!
இன்று மட்டும் தமிழகத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கை 72,433 ஆகும்.. இன்று பிசிஆர் சோதனைக்குள்ளானோரின் எண்ணிக்கை 71,147 பேர்ஆவர்.. அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 97,32,863 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 201 மையங்களில் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. தற்போது 26,356 பேர் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.