வாட்ஸ்அப்புக்கு வந்தது புது கட்டுப்பாடு.. வதந்தி தொல்லைகளுக்கு முடிவுகட்ட அதிரடி
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வாட்ஸ் அப் செயலி புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதாரப்பூர்வமான தகவல்கள், செய்தி இணையதளங்கள், செய்தி தொலைக்காட்சி சேனல்கள் உள்ளிட்டவற்றின் மூலம் மக்களிடம் சென்று சேர்வதற்கு முன்பாக, போலி மெசேஜ்கள் றெக்கை கட்டி வாட்ஸ் அப் மூலம் பரவுகின்றன.
இதன் காரணமாக மக்களிடம் குழப்பமான சூழ்நிலை ஏற்படுகிறது. எனவேதான் வாட்ஸ் அப் செயலியில் அதிக முறை பார்வர்ட் செய்யப்பட்ட மெசேஜ்களை வெறும் ஒரு நபருக்கு மட்டும் தான் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்து விட்டது.
எனவே, இனிமேல் அதிகமுறை மெசேஜ்களை நீங்கள் ஒரு நபருக்கு மட்டும் தான் அனுப்ப முடியும். இதன்மூலம் வதந்திகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் பரவக்கூடிய போலி மெசேஜ்களுக்கு அவ்வப்போது மத்திய அரசு மறுப்பு சொல்லி அறிக்கை வெளியிடுவதே வேலையாக இருந்து வருகிறது. இனிமேல் எந்த பிரச்சனை குறையும். மக்கள் இது போன்ற முக்கியமான காலகட்டங்களில், ஊடகங்களை மட்டுமே சார்ந்து இருத்தல்தான், உதவிகரமாக இருக்கும். எனவே வதந்திகள் குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.