இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா.. அதிர வைத்த ரெக்கார்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக்கு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது
தமிழகத்தில் எப்போதும் போல் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. கடந்த 10 நாட்களாகவே தமிழகத்தில் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி வருகிறது.
21184 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு மட்டுமல்ல.. மரணமும் கிடுகிடு உயர்வு.. வெளியானது லிஸ்ட்
சென்னை நிலை
சென்னையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 616 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 13980 பேர் சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இப்படி கொரோனா பாதித்த யாரும் வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்கள் இல்லை. யாரும் வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து சென்னை வந்த யாருக்கும் கொரோனா இல்லை.
எத்தனை சோதனை
தமிழகத்தில் 12039 பேருக்கு இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 457233 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை இதுவரை செய்யப்பட்டுள்ளது. இதுதான் அதிகமான கேஸ்கள் இன்று வர காரணம் என்று கூறுகிறார்கள். முக்கியமாக வெளி மாநிலத்தில் இருந்து வந்த பலருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலம் நிலை
தமிழகத்திற்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்த 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 6 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 160 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இன்று பலி எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துள்ளது. அதே சமயம் இன்று 40 வயதுக்கும் குறைவான 2 பேர் தமிழகத்தில் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது.
டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
தமிழகத்தில் இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 9026 ஆக உள்ளது . தமிழகத்தில் மொத்தமாக 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இப்படி வரிசையாக மக்கள் குணமாகி வருவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.