இதுவரை இல்லாத மோசமான ரெக்கார்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் 817 கொரோனா கேஸ்கள்.. கைமீறி செல்கிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் வரும் கேஸ்களின் எண்ணிக்கை 700ஐ விட அதிகமாக இருக்கிறது. நேற்று முதல் நாள் தமிழகத்தில் 805 கேஸ்கள் ஏற்பட்டது.
அதன்பின் நேற்று 624 கேஸ்கள்தான் தமிழகத்தில் வந்தது. நேற்று குறைவான சோதனைகள் செய்யப்பட்டதால் குறைவாக கேஸ்கள் வந்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மீண்டும் கேஸ்கள் அதிகமாக வந்து இருக்கிறது .
10 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் அருந்தலை.. உடல் உறுப்புகளும் பாதிக்கலை.. 90 வயதில் இறந்த அதிசய சாமியார்
இன்று கேஸ்கள் எத்தனை
இன்று தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலும் இன்று அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 558 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12198 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.
நிலை என்ன
தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 8500 ஆக உள்ளது. இன்று மட்டும் 139 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்ததால் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 567 பேர் இன்று தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 9909 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 6 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகமாக திருவள்ளூரில் 40 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 825 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 253 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நிலை
செங்கல்பட்டில் இன்று மொத்தம் 31 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 888 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 330 பேருக்கு மொத்தமாக கொரோனா உள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுக்க கொரோனா பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது . எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.