கொரோனா தாக்குதல்.. இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை.. முக்கிய முடிவு?
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை செய்கிறார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை செய்கிறார்.
Recommended Video
கொரோனாவால் தமிழகத்தில் மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 558 பேர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை செய்கிறார்.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகள் குறித்து இவர் ஆலோசனை செய்ய உள்ளார்.சென்னையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கொரோனா தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து இருக்கும் நடவடிக்கை குறித்து இதில் ஆலோசனை செய்யப்படும்.
முதல் சோதனையில் நெகட்டிவ்.. ஆனால் 28 நாட்களில் பாசிட்டிவ்.. குழப்பும் கொரோனா.. பீலா ராஜேஷ் விளக்கம்!
அந்தந்த மாவட்டங்களின் நிலையை முதல்வர் கேட்க உள்ளார். மாவட்டங்களில் இருக்கும் எல்லா மருத்துவமனைகளையும் கண்காணிப்பது எப்படி, கொரோனா அறிகுறியுடன் அனுமதி ஆகும் எல்லோரையும் கண்காணிப்பது எப்படி என்று இதில் ஆலோசனை செய்ய உள்ளனர்.
மாவட்ட ஆட்சியாளர்கள் இதில் தீவிரமாக களமிறங்கி பணியாற்ற வேண்டும் என்று கூறப்படலாம். மாவட்ட ஆட்சியாளர்களுக்கு இதில் முக்கியமான அறிவுரைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.