தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்!
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் இதுவரை கொரோனா பரவலில் 5-ம் இடத்தில் இருந்து வந்தது தமிழகம்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
தமிழகம் 4-வது இடம்
தற்போது 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 9 ஆயிரத்தை தாண்டியதாக உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழகம் கொரோனா நிலவரம்
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,80,728. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13,071. தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65,635 ஆக உள்ளது.
அரசு ஆலோசனை
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் இன்று ஆலோசனை
இந்த நிலையில் இன்று சேலத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். சென்னையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
இரவு ஊரடங்கு- இன்று அறிவிப்பு?
இதையடுத்து தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்
மேலும் நீலகிரி, ஏற்காடு மற்றும் கொடைக்கானல் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் முழுமையான விவரம்: