தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா.. 530908 பேர் இதுவரை பாதிப்பு.. அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்!
சென்னை: தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 530908 பேருக்கு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே செல்கிறது. தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாம் இடம் வகித்து வருகிறது. ஆனால் ஒரே அடியாக தமிழகத்தில் அதிக கொரோனா கேஸ்கள் வரவில்லை.
தினமும் ஒரே அளவில் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. பலி எண்ணிக்கையும் கடந்த 10 நாட்களாக 100க்கும் குறைவாக வர தொடங்கி உள்ளது.
சென்னை எப்படி
தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 530908 பேருக்கு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 989 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆக்டிவ் கேஸ்களாக 9946 பேர் உள்ளனர். சென்னையில் மொத்தமாக 153616 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டிஸ்சார்ஜ் எத்தனை
தமிழகத்தில் இன்று 67 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 8685 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 475717 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்டங்கள் நிலை
எப்போதும் போல இந்த முறையும் சென்னைக்கு அடுத்து கோவையில் அதிக கேஸ்கள் வருகிறது. கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.இன்று கோவையில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 54778 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 268 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 31972 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 288 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 15923 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
டெஸ்டிங் எப்படி
46506 பேர் தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். தமிழகத்தில் இன்று புதிய கேஸ்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
- இன்று 85543 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
- 6303466 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று 83701 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
- 6107308 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.