சென்னையில் மட்டுமல்ல.. விடாமல் அதிகரிக்கும் கேஸ்கள்.. தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 லிருந்து 17,728ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 509 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் தமிழகத்தில் இன்றுதான் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
மாதம் ரூ.1000 முதல் 10000 வரை.. எல்ஐசி வெளியிட்ட முதியோர்களுக்கான புதிய சூப்பர் பென்ஷன் திட்டம்
தமிழகம் நிலை
தமிழகத்தில் இன்று 611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மொத்தமாக 9342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 127 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 9677 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 10289 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
மொத்த டெஸ்ட்
தமிழகத்தில் மொத்தம் 412357 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் மொத்தம் 431739 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 857 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 436 பேருக்கு கொரோனா உள்ளது.
மாவட்ட நிலவரம்
தர்மபுரியில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 8 பேருக்கு கொரோனா உள்ளது. தர்மபுரியில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 316 பேருக்கு கொரோனா உள்ளது.கன்னியாகுமரியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 58 பேருக்கு கொரோனா உள்ளது. கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 25 பேருக்கு கொரோனா உள்ளது. மதுரையில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 233 பேருக்கு கொரோனா உள்ளது.
அதிகம் எங்கே
ராணிப்பேட்டையில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 96 பேருக்கு கொரோனா உள்ளது. திருப்பத்தூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 31 பேருக்கு கொரோனா உள்ளது. திருவள்ளூரில் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 788 பேருக்கு கொரோனா உள்ளது. திருவண்ணாமலையில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 243 பேருக்கு கொரோனா உள்ளது. தூத்துக்குடியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 187 பேருக்கு கொரோனா உள்ளது.