கட்டுக்குள் இருக்கும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் இதுதான்
சென்னை: தமிழகத்தில் இன்று, எத்தனை பேருக்கு, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து இன்று அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
ஸ்க்ரீன் செய்யப்பட்ட பயணிகள்- 2,09,284, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் படுக்கைகள்- 13,727, வென்டிலேட்டர்கள்: 2,464, தற்போதைய சேர்க்கை- 284, சோதிக்கப்பட்ட மாதிரிகள் - 1039 (எதிர்மறை -933, நேர்மறை- 26 (1 டிஸ்சார்ஜ்), பரிசோதனையின்கீழ்- 80) உள்ளன. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு!
அதாவது, தற்போது, 26 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேநேரம், லாக்டவுன் தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்பு நோய் தொற்று இருந்தவர்களுக்கு நோய் பாதிப்பு அறிகுறி தெரிய 14 நாட்களாவது தேவைப்படும் என்பதால், தொடர்ந்து மக்கள் தங்கள் உடல்நிலையை கண்காணித்து வருவது முக்கியமானது. வெளியுலக தொடர்பை துண்டிப்பது மிகவும் அவசியம்.
#UPDATE: Hon’ble @CMOTamilNadu held a 3.5 hours long meeting with district collectors & SP’s via video conference. Important discussions took place & authorities were apprised of the action plans. @MoHFW_INDIA #TN_Together_AgainstCorona #21daylockdown #Vijayabaskar pic.twitter.com/4H0a8Z7J2b
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 26, 2020
முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி. ஆகியோருடன் சுமார் 3.5 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதில், அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண்டார்.