தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 1500 பேருக்கும் கீழாக குறைவு
தமிழ்நாட்டில் இன்று 1,457 கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 776174 பேராக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,457 கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 776174 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,457 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் 1,457 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை776174 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 884பேர் ஆண்கள், 580பேர் பெண்கள்.
இன்று 1,797பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,53,332ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியில் உற்பத்தி பிழை - கோவிட் 19 மருந்தில் கடும் பின்னடைவு
இன்று மட்டும் 14பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 669ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 11,173 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் 219 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று ஒரே நாளில் 60, 964பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 18லட்சத்து 2 ஆயிரத்து 567ஆக அதிகரித்துள்ளது.