தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு
தமிழகத்தில் இன்று 5,363 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,740 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,999 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 5,363 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,740 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,325 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,282 பேர் ஆண்கள், 2,043 பேர் பெண்கள். கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,999 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 5,363 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,740 ஆக அதிகரித்துள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 84,979 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் கொரோனா பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,25,037 ஆக அதிகரித்துள்ளது. 177 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 63 பேர் உயிரிழந்தனர். 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,010 ஆக அதிகரித்துள்ளது. 46249 பேர் தமிழகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.