சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி - 5406 பேர் குணமடைந்தனர்

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 5337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5337 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5406 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிகை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,52,674 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,97,377 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,350 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus updates: TamilNadu today affect 5,337

தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8947 பேராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தினசரியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

English summary
Across Tamil Nadu, 5406 people have recovered from Corona and returned home in the last 24 hours. Today, 5,337 people have been diagnosed with corona infection in a single day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X