சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு? வியாபாரிகள் எதிர்ப்பு.. நாளை முக்கிய முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

Recommended Video

    கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய திட்டம்? நாளை முக்கிய முடிவு

    சென்னை கோயம்பேடு சந்தையில் 4000 காய்கறிக் கடைகள், 3500 பழக்கடைகள், 2500 மலர்க் கடைகள் என மொத்தம் 10,000 கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மட்டும் 30,000 பேர் உள்ளனர்.

    corporation officials may Decision to Relocate chennai koyambedu Market?

    அத்துடன் வெளியிலிருந்து காய்கறி வாங்க வரும் வணிகர்கள், கோயம்பேடு சந்தையை நம்பி பிற வணிகம் செய்வோர் என சுமார் ஒரு லட்சம் பேர் தினமும் காய்கறி வணிகம் செய்கிறார்கள். இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வரும் வணிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவி உள்ளது. அத்துடன் கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சனிக்கிழமை அன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமனித இடைவெளி இன்றி கோயம்பேடு சந்தையில் குவிந்து காய்கறிகளை வாங்கி குவித்தனர். இதனால் பலருக்கும் கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    உங்கள் வருமானத்தில் 18% கட்டாயமாக பிடித்தம் செய்யப்படுமா? வைரலாக சுற்றும் போலி மெசேஜ்உங்கள் வருமானத்தில் 18% கட்டாயமாக பிடித்தம் செய்யப்படுமா? வைரலாக சுற்றும் போலி மெசேஜ்

    இந்நிலையில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் கொரோனா பரவியதாலும், கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தற்காலிகமாக கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் பகுதிக்கு கோயம்பேடு சந்தை மூன்றாக பிரித்து வேறு வேறு அமைக்கவும் ஆலோசனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் அவர்களிடம் பேசும் போது, மேலும் 4 பேருக்கு கொரோனா பரவி நிலையில் கோயம்பேடு சந்தையை உடனே மூட வேண்டியது வரும் என்றார். இதற்கிடையில் பேச்சவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

    சென்னையில் மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் செல்வதைத் தவிர்த்து, அந்தந்தப் பகுதிகளுக்கு வரும் நடமாடும் கடைகளிலும், ஆன்லைனிலும் காய்கறிகளை வாங்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.

    English summary
    corporation officials may Decision to Relocate chennai koyambedu Market? to Relocate at madavaram and kelambakkam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X