டீச்சரை நம்பி டியூஷனுக்கு அனுப்பிய பெற்றோர்.. 6 வயது சிறுமியை சீரழித்த கணவர்.. இருவருக்கும் போக்சோ!
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஆட்டோ டிரைவர் மனைவியுடன் கைதானார்
சென்னை: பாலியல் தொல்லைக்கு விஜயலட்சுமியே உடந்தையாக இருந்திருக்கிறார்.. 6 வயது குழந்தைக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றால், மனைவி விஜயலட்சுமியும் சேர்ந்து இந்த கொடுமைக்கு காரணமாக இருந்தது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.. இவர் ஒரு பள்ளிக்கூட டீச்சர் என்ற தகவல் அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்.. ஆட்டோ ஓட்டுகிறார்.. இவருடைய மனைவி விஜயலட்சுமி.. 32 வயதான விஜயலட்சுமி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
தனியார் பள்ளியில் வேலை பார்ப்பதால், சாயங்கால நேரங்களில் வீட்டில் டியூஷனும் சொல்லி தருகிறார்.. அதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குழந்தைகளை விஜயலட்சுமியை நம்பி டியூஷன் படிக்க அனுப்பி வைத்தனர்.
பாலியல் தொல்லை
அப்படித்தான் 6 வயது சிறுமி டியூஷன் படித்து வந்திருக்கிறாள்.. நேற்று டியூஷன் முடிந்து வந்த குழந்தை அழுது கொண்டே வீட்டுக்கு திரும்பியிருக்கிறாள்.. கதறி கதறி அழுவதை கண்ட பெற்றோர், பதறிபோய் என்ன நடந்தது என்று கேட்டனர்.
தலைமறைவு
அப்போதுதான், நரேஷ் பாலியல் தொல்லை தந்ததை அழுதுகொண்டே சிறுமி சொன்னாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஆவடி மகளிர் போலீசில் புகார் தந்தனர். ஆனால் அதற்குள் இந்த ஜோடி தலைமறைவாகி விட்டது.
கைது
எனினும் போலீசார் விடாமல் அவர்களை தேடியது.. அப்போதுதான், பூந்தமல்லியில் உள்ள சொந்தக்காரர் வீட்டில் 2 பேரும் ஒளிந்து கொண்டிருப்பது தெரியவந்தது.. இதையடுத்து அவர்களை மடக்க பிடித்து கைது செய்தனர் போலீசார்... படிக்க வரும் பிள்ளைகளுக்கு நரேஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.
ஜெயில்
இந்த விஷயம் விஜயலட்சுமிக்கு தெரிந்தும், அவரும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இறுதியில், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு.. நைட் நேரமே கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலிலும் அடைத்தனர்!