எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கோவாக்சின் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனையாக இரண்டு பேருக்கு தடுப்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
சென்னை: காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று இரண்டாம் கட்ட கோவாக்சின் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்ததால், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கான தடுப்பூசி இரண்டு பேருக்கு போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட இருவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Recommended Video
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.
முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி கோவாக்சின் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.
இளைய தளபதியே...உதயநிதியை அன்று வாழ்த்திய கு.க. செல்வம் - இன்று ஏசுவது ஏன்?jey
இந்த நிலையில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் 10 தன்னார்வலர்களில் ஆரோக்கியமான நிலையில் இருந்த 2 பேருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதியன்று 0.5 எம்எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி இன்று தன்னார்வலர்கள் 2 பேருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து தடுப்பூசி மூலம் செலுத்தப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட இருவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.