அதிரும் சென்னை, விழுப்புரம், மதுரை,செங்கல்பட்டு... மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 203 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம்.
Recommended Video
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. இன்று கடலூரில் 9 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 4 பேர், மதுரை, தென்காசி, அரியலூர், திருவள்ளூரில் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, கன்னியாகுமரி, செங்கல்பட்டில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் , அடைப்புக்குறியில் சிகிச்சை பெறுபவர்கள் விவரம்
- சென்னை 1458 (1190)
- கோவை 146 (11)
- திருப்பூர் 114 (06)
- செங்கல்பட்டு 91 (42)
- மதுரை 90 (45)
- விழுப்புரம் 86 ( 57)
- திண்டுக்கல் 81 (8)
- ஈரோடு 70 (0)
- திருவள்ளூர் 70 (25)
- திருநெல்வேலி 63 (7)
- நாமக்கல் 61 11)
- தஞ்சாவூர் 57 (16)
- திருச்சி 51 (4)
- நாகப்பட்டினம் 45 (3)
- தேனி 44 (1)
- கரூர் 43 (1)
- காஞ்சிபுரம் 41 (32)
- ராணிப்பேட்டை 40 (6)
- தென்காசி 40 (29)
- கடலூர் 39 (12)
- சேலம் 33 (9)
- விருதுநகர் 32 (13)
- திருவாரூர் 29 (10)
- அரியலூர் 28 (22)
- தூத்துக்குடி 27 (0)
- வேலூர் 22 (6)
- ராமநாதபுரம் 20 (8)
- திருப்பத்தூர் 18 (1)
- கன்னியாகுமரி 17 (7)
- திருவண்ணாமலை 17 (7)
- கள்ளக்குறிச்சி 15 (12)
- சிவகங்கை 12 (1)
- பெரம்பலூர் 11 (8)
- நீலகிரி 9 (0)
- புதுக்கோட்டை 1 (1)
- தருமபுரி 1 (1)
- கிருஷ்ணகிரி 0 (0)
தமிழகத்தில் கொரோனாவால் சென்னையில் மிக அதிக அளவாக 1190 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.அதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் 57 பேரும், மதுரையில் 45 பேரும், செங்கல்பட்டில் 42 பேரும், காஞ்சிபுரத்தில் 32 பேரும், தென்காசியில் 29 பேரும், திருவள்ளூரில் 25 பேரும் அரியலூரில் 22 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா இல்லாத மாவட்டங்களாக கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி ஆகியவை உள்ளன.