தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. திண்டுக்கல்லில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா
சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இன்று 81 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9 பேருக்கும், சென்னையில் 5 பேருக்கும், தஞ்சையில் 4 பேருக்கும், தென் காசியில் 3 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், ராமநாதபுரம் 2 பேருக்கும், கடலூரில் ஒருவருக்கும், நாகப்பட்டினத்தில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. மொத்தம் 1204 ஆக உயர்வு
கோவையில் 126 பேர்
சென்னையில் 210 பேருக்கும், கோவை மாவட்டத்தில், 126 பேருக்கும், திருப்பூரில் 78பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கும், நெல்லையில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 43 பேருக்கும், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் 33 பேர்
தேனி மாவட்டத்தில் 41 பேருக்கும் கரூர் மாவட்டத்தில் 40 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 41 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 31 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 28, கடலூர் 20, சேலத்தில் 18 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் 17 பேர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் 17 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டங்களில் 16 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருக்கும் இன்று மாலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் 8 பேர்
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேருக்கும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.