அரசியல்வாதிகளை துரத்தும் கொரோனா.. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது.கொரோனா தினசரி பாதிப்பு இன்று 8,000-ஐ நெருங்கி உள்ளது.
கொரோனாவை விரட்டியடிப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு மட்டும் அல்லாது அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று எற்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதும் பல்வேறு வேட்பாளர்களை கொரோனா தாக்கியது. தேர்தல் முடிந்த பிறகும் தி.மு.க., அ.தி.மு.க என்ற பாகுபாடின்றி வேட்பாளர்களை தொற்று பாதித்து வருகிறது.
குவியும் உடல்கள்.. அமரர் ஊர்தி தட்டுப்பாடு.. லாரியில் ஏற்றிசெல்லப்படும் உடல்கள்.. சத்தீஸ்கரில் அவலம்
இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.