செம நியூஸ்.. தமிழகத்தில் தொடர்ந்து குறையும் ஆக்டிவ் கேஸ்கள்.. அடியோடு சரியும் கொரோனா!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.
வேகமாக குறையும் கொரோனா
தமிழக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கையாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 1,200-க்குள் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். மொத்த பாதிப்பு 26,96,328 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பும் குறைவு
கொரோனாவுக்கு மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். கோவையில் 2 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு, அரியலூரில் ஒருவர் இறந்தார். இதுவரை கொரோனாவுக்கு பேர் 36,033 உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,341 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,47,504 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.
முதலிடம்
12,791 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,22,253 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,95,02,799 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 144 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.
கோவை
கோவையில் 130 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் நேற்றைய பாதிப்பை விட இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது செங்கல்பட்டில் 95 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 18 பேருக்கும், திருவள்ளூரில் 40 பேருக்கும், திருச்சியில் 46 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 77 பேருக்கும், விருதுநகரில் 9 பேருக்கும், ஈரோட்டில் 69 பேருக்கும், சேலத்தில் 57 பேருக்கும், நாமக்கல்லில் 48 பேருக்கும், தஞ்சாவூரில் 55 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.