சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் இன்று 1,127 பேருக்கு கொரோனா.. இந்த 2 மாவட்டங்களில் பாதிப்பு சதம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிக பாதிப்பில் இருந்து வந்த கோவையில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

தொடர்ந்து குறையும் கொரோனா

தொடர்ந்து குறையும் கொரோனா

தமிழக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கையாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 1,200-க்குள் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். மொத்த பாதிப்பு 26,95,216 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பும் குறைவு

உயிரிழப்பும் குறைவு

கொரோனாவுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். திருவள்ளூரில் 2 பேர் உயிரிழந்தனர். கோவையில் ஒருவர் இறந்தார். சென்னையில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கொரோனாவுக்கு பேர் 36,019 உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,358 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,46,163 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

 முதலிடம்

முதலிடம்

13,034 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,23,724 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,93,80,546 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 146 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 150-க்கு கீழே குறைந்து வருகிறது.. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

 கோவையிலும் குறைவு

கோவையிலும் குறைவு

கோவையில் 128 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா குறைந்து வருகிறது. செங்கல்பட்டில் 96 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 34 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 20 பேருக்கும், திருவள்ளூரில் 41 பேருக்கும், திருச்சியில் 47 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 78 பேருக்கும், விருதுநகரில் 5 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், சேலத்தில் 58 பேருக்கும், நாமக்கல்லில் 50 பேருக்கும், தஞ்சாவூரில் 57 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.

English summary
Corona infection has been confirmed in 1,127 people in Tamil Nadu today. Another 15 people died in the corona. The daily impact in Chennai and Coimbatore districts is over 100
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X