வீட்டுக்கு அனுப்பாதீங்க.. சீனாவில் செய்ததை சென்னையில் உடனே செய்யுங்கள்.. அன்புமணி அலார்ட்
சென்னை: கொரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது என்றும் விரிவான சிகிச்சையளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் பாமக இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தங்கி மருத்துவம் பெற வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைக்கப்படுவதாகவும் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் மூலம் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவுவதற்கு மட்டுமே வழி வகுக்கும். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மொத்தம் 6009 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சினிமாவில் புகைப்பிடிப்பதை இன்னமும் பல நடிகர்கள் தொடர்கின்றனர்... ராமதாஸ் வேதனை
ஒரு மாதத்தில் அதிகம்
தமிழகத்தில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து இரு மாதங்களில் 6009 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், அதாவது மே 8-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்தில் 25,658 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் இதே காலத்தில் 19,106 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றுடன் முடிவடைந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 4.20 மடங்கு அதிகரித்துள்ளது. இது மிகவும் அதிகம் ஆகும்.
அரசு அறிவுரை பின்பற்றுதல்
நான் இன்று காலை வேறு வீடியோ போட்டேன்,. எல்லாரும் உங்கள் நண்பன் எப்படி என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து, அவர் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதை கூறியிருந்தேன். உங்கள் மூலமாக சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.கொரோனாவுக்கு என்ன அறிவுறுத்தல்களை அரசு கூறியிருக்கிறதோ அதை பின்பற்றுங்கள். அரசு நிறைய முயற்சி எடுத்துள்ளது. அரசு மட்டும் எடுத்தால் போதாது நீங்களும் முயற்சி எடுக்க வேண்டும். நான் பேஸ்புக்கில் யாரும் ஷேர் பண்ணாதீங்க என்று தான் போட்டிருந்தேன்" என்றார்.
விஜயபாஸ்கருக்கு பதில்
அமைச்சர் விஜயபாஸ்கர் உங்களுக்கு கண்டனம் தெரிவித்தார். சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்ட போது, "என்னுடைய வீடியோ தவறாக சென்றுள்ளது. முழு வீடியோவை பார்த்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்காது. நாடக்குழுவுக்காக போட்ட வீடியோ. அந்த வீடியோ குறித்து நிறைய பேர் சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததாக கூறினார்கள். நான் அந்த வீடியோவில் எங்குமே அரசாங்கத்தை குற்றம்சாட்டவில்லை. மருத்துவமனைகளை குற்றம்சாட்டவில்லை. டாக்டர்களை குற்றம்சாட்டவில்லை. யாரையும் குற்றம்சாட்டவில்லை.
பெட் வசதி இல்லை
இன்றைக்கு நோயாளி ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பது என்பது சவாலாக உள்ளது என்பது உண்மைதான். நாங்கள் மருத்துவமனையில் தொடர்பு கொண்ட நேரத்தில், இங்கு அழைத்து வர வேண்டாம், பெட் வசதி இல்லை என்று கூறினார்கள். அதன்பிறகு ஒரு மருத்துவனைக்கு போனோம். அட்மிட் செய்தோம். இப்போது குணமடைந்து வருகிறார். எங்க குழு உறுப்பினர்களுக்கு நான் சொல்லவந்தது என்னவென்றால், மிகவும் கவனமாக இருங்கள். கையில் சும்மா அடி பட்டால் கூட மருத்துவமனையில் அட்மிட் ஆவது கடினமாக உள்ளது. பெட் கிடைக்கவில்லை என்ற ஒரு வார்த்தையை வைத்து எல்லா மீடியாக்களும் எனது பேச்சை பெரிதுபடுத்திவிட்டார்கள்.
தமிழக அரசுக்கு பாராட்டு
தனிப்பட்ட முறையில் போட்ட வீடியோ. அந்த அளவுக்கு சவால் உள்ளது. அதனால் ஜாக்கரதையாக இருங்கள் என்று சொன்ன வீடியோவை மிகைப்படுத்தி விட்டார்கள். சென்னையில் தினமும் 1000 பேர் என 10 நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வந்திருச்சுன்னா, 10 ஆயிரம் வெண்டிலேட்டர் வைக்க முடியுமா? நாம் கவனமாக இருக்க வேண்டும். மத்திய அரசும் , தமிழக அரசும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறான வதந்தி சென்றுள்ளது.
அந்த நேரத்தில் பட்டது
நேரம் கொடுத்தால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சென்று எடுத்துரைப்பேன்..விஜயபாஸ்கர் சார் உங்கள் பணியை வெகுவாக பாராட்டி உள்ளேன். இப்போதும் பாராட்டிக்கொள்கிறேன். நான் செய்திவாசிப்பாளன் நடுநிலையாக உள்ளேன். அரசாங்கத்தையோ, மருத்துவமனையோ குற்றம் சொல்லவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு அந்த நேரத்தில் அசாதாரண சூழலில் மனதில் பட்டது. அதனால் நாடக்குழு உறுப்பினர்களுக்கு சொன்னேன். விழிப்புணர்வு செய்தேன். என் குழந்தைகள் அவர்கள். அவங்க எனக்கு முக்கியம். நான் எந்த இடத்திலும் பெட் இல்லை என்றோ, வேண்டுமென்றே மருத்துவமனையில் திருப்பி அனுப்புகிறார்கள் என்றோ நான் சொல்லவே இல்லை" இவ்வாறு கூறினார்.