குட் நியூஸ்... கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்.. டெஸ்ட்டுகளும் கிடுகிடு உயர்வு..!
தமிழகத்தில் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது
சென்னை: செம.. ரொம்ப நாளைக்கு பிறகு தமிழகத்தில் 2 நல்ல செய்தி நமக்கு ஆறுதல் தந்துள்ளது.. ஒன்று, தமிழகத்தில் இன்று மட்டும் 2,325 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர்.. மற்றொன்று தொடர்ந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இன்றும் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்தபடியே உள்ளது.. இப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துவிட்டது.
இதை தவிர, 3,943 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்தமாக பாதிப்பு 90,167 ஆக உள்ளது... அதேசமயம், 60 பேர் இன்று உயிரிழந்தள்ளனர்.. எனினும், பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், குணமாவதும் அதிகரித்து வருகிறது.. இதுவரை 50,074 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. இன்று மட்டும் 2,325 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது நிம்மதி தருகிறது.
அதேபோல, தமிழகத்தில் தொடர்ந்து அதிக அளவில் டெஸ்ட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்றும் 30,053 பேருக்கும், டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 30,242 சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் 90 மையங்களில் இந்த கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 38,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 11,70,683 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு தொற்று.. சென்னை, மதுரையில் கிடுகிடு உயர்வு
இந்தியாவிலேயே நம் மாநிலத்தில்தான் டெஸ்ட் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு நாளும் கொரோனாவைரஸ் நமக்கு பீதியை தந்து வந்தாலும், குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.53% ஆக உள்ளது ஒரு வகையில் நிம்மதியை தருகிறது.. இந்த விகிதம் 100 ஆக வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!