மநுநீதிப்படி ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்களை சேர்ப்பதில்லை என்பது நடிகை குஷ்பு அறிவாரா? சிபிஎம் அருணன்
சென்னை: மநுநீதிப்படியே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பெண்களை அந்த அமைப்பில் சேர்ப்பது இல்லை என்பது நடிகை குஷ்பு அறிவாரா? என சிபிஎம் மூத்த தலைவர் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, அனைத்து பெண்களையும் விபச்சாரிகள் என்று சொன்ன விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அனைத்து பெண்களிடமும் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக திமுக எந்த கருத்தையும் ஏன் தெரிவிக்கவில்லை? என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு சிபிஎம் மூத்த தலைவர் அருணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மநுசாஸ்திரம் படித்திருப்பதாக கூறும் குஷ்பு அதன் 9வது அத்தியாயம் படித்தாரோ? அதில் "பெண்கள் உயிரற்ற பொருட்களே", "சுயேச்சையான வாழ்வுக்கு பெண் தகுதியற்றவள்" என இருப்பதை அறிவாரோ?
அந்த அநீதியை அப்படியே ஏற்றுதான் ஆர்எஸ்எஸ்சில் பெண்கள் சேர்க்கப்படுவதில்லை என்பது தெரியுமா? இவ்வாறு அருணன் கூறியுள்ளார்.